15 October, 2025
#மகள்
மகள்கள் என் தேவதைகள்
எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள்.
எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சி உண்டு.
[ ] காதல் திருமணம் செய்ததால் அந்த பெண் குழந்தைகளை வயிற்றில் சுமந்த போது சரியான போஷாக்கோ கவனிப்போ கொடுக்கவில்லை என்று.
[ ] பெரிய மகள் இன்று ஏதாவது உடல் பிரச்னை சொன்னால் எனக்கு கவலைப் புழு போல் குடைகிறது. அந்தத் தவறை செய்திருக்கக் கூடாதோ. இன்னும் கொஞ்ச காலம் காத்திருந்து வயிற்றில் பிள்ளையைத் தாங்கி இருக்கணுமோ. சரி செய்ய முடியாத தவறைச் செய்து விட்டேனே. அந்த மகள் வயிற்றில் இருக்கும் போதே , நான் கவலைப்படும் போது முட்டி முட்டி ஆறுதல் சொன்னவள். இன்றும் எங்களுக்கு ஒன்று என்றால் ஆண் பிள்ளை போல் எங்களைப் பற்றி சிந்திப்பவள். இவள் தேவதை அல்லாமல் வேறென்ன.
[ ]
இரண்டாவது மகள் நான்கு வருடம் கழித்து நாங்க கொஞ்சம் ஸ்டெடி ஆகிக்கிட்ட பின்னால தான் உண்டானாள். ஆனாலும் நெல்லையில் இருந்து நாகர்கோயிலுக்கு தினம் ரயில் பயணம். நிலையத்திலிருந்து அலுவலகத்துக்கு அரை மணி நேரம் நடைப் பயணம். குழந்தை ஆரோக்கியமாக பிறந்தது என்றாலும் அலைக்கழிப்பு.
ஒரு நாள் டிரெயின் புறப்பட்டு விடுமோ என்ற பதற் றத்தில் நிலையத்தில் கவுத்துப் போட்ட "ப" போல் கிடக்குமே சரளைக்கற்கள் அதன் மேல் வயிற்றுப் பிள்ளையோடு ஏறி , இறங்கி போன அனுபவம் இன்றும் நினைத்தால் அடி வயிறு கலங்கும்.
அதற்கு ஈடு செய்யும் விதமாய் என் மகள்கள் பிள்ளை உண்டான போது ஆகச் சிறந்த கவனிப்பு செய்து என் குற்ற உணர்ச்சியைக் கொஞ்சம் தணித்துக் கொண்டேன்.
பாசமும் பரிவும் என் பிள்ளைகள் எனக்கு வாரி வழங்குகிறார்கள். அதுவும் நான் பலவீனப்படும் நேரத்தில் பக்க பலமாய் நிற்கிறார்கள். அது தான் இன்னும் கொஞ்ச காலம் கூடுதலாய் வாழ்ந்து என் கடனைக் கழிக்க வேண்டும் என்ற உந்துதலைத் தருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!