Bio Data !!

25 October, 2025

#முறையிட ஒரு கடவுள்

#முறையிட ஒரு கடவுள் ஆசிரியர் : சர்வோத்தமன் சடகோபன் மணல் வீடு பதிப்பகம். விலை : ரூ 150/- முதல் பதிப்பு : டிசம்பர் 2020 ***** இது ஆசிரியரின் முதல் சிறு கதைத் தொகுப்பு. 14 சிறுகதைகளை தொகுத்திருக்கிறார். முதல் கதை தஸ்தாயெவ்ஸிகியின் புத்தக சாலை. இதில் நான் ரசித்த வரி ஒன்று உண்டு. "பார்வதி பேரழகி என்று சொல்ல முடியாது. கண்டிப்பாக அழகி. சிரிப்பதை ஙிட சிரிக்க முற்படும் தருணங்கள் அற்புதமானவை" கட்டுப்படுத்தி வரும் ஒரு கள்ளச் சிரிப்பு என் கண் முன் வந்தது. 2) ஷெனாய் கசிந்து கொண்டிருந்தது அடுத்த கதை. நன்கு படித்து நல்ல வேலையில் அமர்ந்து நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தவர் ஸ்ரீநிவாச ராவ். அதை விட்டு தன் ஊருக்கே வந்து விவசாயம் பார்க்கிறார்.தன் வீட்டிற்கு வரும் ராஜன் என்பவரை யார் என்ன காரியமாக வந்தார் என்பதைக் கேட்காமலே ஏற்றுக் கொள்கிறார். விஞ்ஞானத்தால் எதுவும் செய்ய முடியாது என்ற தன் தந்தையின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்தவர் ராஜன். ஸ்ரீநி தன் மகன் உயிரைக் காக்காத நவீன மருத்துவத்தின் மேல் கொண்ட வெறுப்பால் உத்தியோகம் துறந்து கிராமம் வந்தவர். ராஜனின் தந்தையும் இறந்து போனார். ஸ்ரீநியின் மனைவி தன் மகன் இறந்த துக்கத்தில் தன் உயிரை மாய்த்துக் கொண்டவள். "பெண்களுக்கு குழந்தைகள் பிறந்த பின் கணவன் ஒரு பொருட்டே இல்லை" என்கிறார். ஓரளவு உண்மையாகக் கூட இருக்கலாம். இல்லையென்றால் தன் கணவனின் துயரம் பற்றி சிந்திக்காமல் தற்கொலை செய்வாளா? விவசாயம் பற்றி அதிகம் தெரியாது. ஆனாலும் என்ன நம் முன்னோர்கள் செய்த தொழில் தானே என்கிறார். என் தோழி விவசாய விருது பெற்றது மனதில் எழுகிறது. எனக்கு ரொம்ப பிடித்த கதை இது. எது சரி எது தவறு என்று குழம்பும் இன்றைய மன நிலை. 3) பூதக் கண்ணாடி. கதவை அவ்வளவு சிலாகித்து எழுதுகிறார். கதவு வழியே மட்டுமே நம்மால் உள்ளே போகவும் முடியும். வெளியே வரவும் முடியும். சுவரில் இது சாத்தியமில்லை என்கிறார். எனக்கு சுவர் போல ஒருவரையும் பக்கம் வர விடாத , இறுதி வரை தனக்கைன யாருமே இல்லாத மனிதர்களை நினைக்கத் தோன்றியது. 4) நீலம் என்ற கதை கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்தது. வெங்கடனை மீரா விரும்புவது போல் தான் வருகிறது. மீரா என்பது இந்துப் பெயர் தான். பின் யாருக்காக இஸ்லாத்துக்கு மாறுகிறான். ரஹ்மத்துல்லாஹ் என்று பெயர் மாற்றம் செய்கிறான்.அதை விசாரித்த போது மீராள், மீரான் என்று பெயர் முஸ்லிம்கள் வைப்பார்கள் என்றும் மீரா என்று அழைப்பார்கள் என்றும் சொன்னார்கள். 11) மனப் பிறழ்வு பற்றிய கதை "பிளவு" மன அழுத்த துயரத்தை கடந்து வந்தவர்களால் இதை நன்கு உணர முடியும். 12) " உலவ ஒரு வெளி" இதைக் கதை என்பதை விட கட்டுரை எனலாம். இது எண்கள் சூழ் உலகு என்கிறார். உண்மை. தன் ஊரில் தான் இங்கே செல்லக் கூடாது அங்கே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு என்றால் விடுதியிலும் அதையே சந்திக்கும் போது எனக்கு உலவ ஒரு வெளி கொடுங்கள. என்று கேட்கிறார். 14) தனிப் பெருங் கருணை: ஒரு பொறுப்பற்ற பையனாக ராமனைக் காட்டிக் கொண்டே வருகிறார்கள் ஆனால் ஒரு சண்டையில் அவன் நேர்த்தியைப் பார்த்து துருகன சொன்ன பிறகு தன்னைப் பற்றி சிந்துத்து பொறுப்புள்ளவனாக மாறுவதாக வருகிறது. எங்கும் திறமைகள் யாரோ ஒருவரால் தான் கண்டு பிடிக்கப்பட்டு மெருகேறுகிறது. நேற்று (25.10.2025) இல் பிச்சிவனத் தெரு, பாளையங்கோட்டையில் இந்த புத்தகம் பற்றி பேசினோம். விவசாயத்தையோ வேற எந்த தொழிலையோ புனிதப்படுத்திப் பேசுதல் அவசியமில்லை என்று ஒருவர் சொன்னார். விவசாயத்தில் வெற்றி பெற்றவர் கணக்கு இருக்கிறது தோற்றுப் போய் பழைய வேலைக்கே திரும்பிப் போனவர் கணக்கு இல்லை என்றார். சரியென்றே தோன்றியது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!