12 July, 2026
ஆனந்த விகடன் பிரசுரத்தில் வந்த ஜெயகாந்தன் கதைகள் என்ற புத்தகத்தை வாங்கினேன். 1960 , 1970 அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு. விகடனில் வந்தது போலவே அந்தந்த பக்கங்களின் நகைச்சுவைத் துணுக்குகளோடு. அதில் ஒரு நாவல் "ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன"
அதில் அலங்காரவல்லியம்மாள் என்றொரு கதாபாத்திரம். அவர் கணவன் ஆடலரசன். அவர்கள் வீட்டு அமைப்பு குடும்ப அமைப்பைத் தான் சித்தரிக்கிறார். பிள்ளைகள் சாப்பிடும் போது தாய் சொல்வதாக இப்படி வருகிறது. " சாப்பிடும் போது எதை அதிகம் சாப்பிடலாம். எதை அதிகம் சாப்பிடலாகாது. எந்தப் பொருள் வாய்வு குணம் மிகுந்தது. எது உஷ்ணம், பித்தம், சீதளம் எனப் பிரித்துப் பிரித்துச் சொல்லி அலங்கார வல்லியம்மாள் பரிமாறுவாள். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்குப் பின் இன்றைய பிள்ளைகள் கையாளும் முறை இது.
என்ன ஒரு முற்போக்கு சிந்தனையோடு எழுதி இருக்கிறார்.
"காதலங்கிறது செக்ஸ் இல்ல. காதல் உயர்வானது. உடம்பின் மேல் தான் காதல்னா எல்லோருமே எல்லோரையுமே காதலிக்க முடியுமே. "
காதலின் உன்னத்த்தை இதை விட எளிதாக விளக்க முடியுமா?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!