30 March, 2026
கரிப்பு மணிகள் 2
கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்.
இதை வாசித்த பின் இனி சமையலில் உப்பிடும் போது நம் கண்ணீர் துளிகளும் இணைந்து உப்பின் சுவை கூடிப் போகலாம்.
எத்தனை விதமான கஷ்டங்களைக் கடந்து இந்த உப்பு நம்மை வந்து சேருகிறது என நமக்கு புரிய வைக்கும் ஒரு நாவல். இது வரை வாசிக்காதவர்கள் வாசிக்க வேண்டிய ஒன்று.
உப்பளத்தில் பணிக்கு வரும் இளம் பெண்களுக்கு உபத்திரவம் கொடுக்கும் கங்காணிகள். சம்மதிக்க மறுப்பவர்களுக்கு பணி மறுப்பு. "போய்த் தொலையுது" ன்னு சம்மதிச்சிட்டால் அடுத்து குழந்தை சுமக்கும் துயரம்.
தொடர்ந்து வரும் பேறு கால அவதி. அன்னக்கிளி அந்த வெள்ளை வெளேரென்ற உப்பளக் களத்தில் தன் இரத்தம் சிதற விழுந்து கிடப்பதை விவரிக்கும் போது உப்பின் நிறம் சிவப்பாக உறுத்துகிறது. ப்பா!! என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத காட்சி.
"கண்டவனுக்கும் முந்தி விரிச்சு வயித்துல பிள்ளை வாங்கிட்டு வந்து நம்ம உசுர வாங்குதுங்க" ன்னு வசைச் சொல் வேறு. அந்த நேரத்தில் பிறக்கும் குழந்தையும் பெண் பிள்ளையாகப் போக நமக்கே "ஐய்யோ! அடுத்தும் ஒரு பொட்ட பிள்ளையா" என அடி வயிற்றிலிருந்து ஒரு கூக்குரல் எழும்.
உணர்வு சரியா பிரதிபலிக்கணும்னு பாதிக்கும் இடம் வரும் போதே ஒரு பதிவைப் போட்டு விடுகிறேன்.
மீண்டும் வருவேன்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!