Bio Data !!

31 March, 2026

கரிப்பு மணிகள் 3

"கரிப்பு மணிகள் " முதல் பதிப்பு 2013 இல் வந்திருக்கிறது. அதிலுள்ள ஒரு வரியைத் தருகிறேன். பதிமூணு வருடங்களுக்குப் பின்னும் இன்றும் அதே நிலை தொடர்வதை நினைத்துப் பாருங்கள். "பவருள்ளவ ( இந்தக் கதை நெடுக இறுதியில் வர வேண்டிய " ன்" னை விட்டே எழுதுகிறார்கள். விடும் போது பால் மாறி விடுகிறது. ஆணைப் பற்றிச் சொல்வது பெண் போல் குறிப்பிடப்பட்டு விடுகிறது. ஆனால் அது அங்கு உள்ள பேச்சு மொழி போல) சேட்ட செஞ்சா அது லாவம்னு அடங்கிப் போற பெண்டுவளத்தா இது வரைக்கும் நான் கேள்விப்பட்டிருக்கே. பாத்துமிருக்கே நீ தான் தயிரியமா எடுத்துச் சொல்றே" பல பெண்கள் தாம் வரம்பு மீறிக் கையாளப்படும் போது கையாள்பவன் பவருள்ளவனாக இருந்தால் அவனுக்கு தன்னைப் பிடித்ததே பெரும் பாக்கியம் என்பது போல் உணர்ந்து வளர விடுகிறார்கள். அது கை மீறிப் போகும் போது வெளியிடுகிறார்கள். அப்போ அதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்பி விடுகிறது. இந்த நிலை இன்று வரை இருக்கிறது. மாற்றம் பெண்களிடமிருந்தே தொடங்க வேண்டும். மிக அழகாகவோ, திறமையாகவோ, பொருளாதார வசதியோடோ so called பவருள்ளவனாகவோ இருக்கும் ஒருவன் "உன் விருப்பமின்றி" உன்னைத் தொட்டாலும் எதிர்க்கப் பழகு. இத்தகைய சிறந்த ஒருவனுக்கு நம்மைப் பிடித்ததே பெரிய விஷயம் என பெருமை கொள்ளாதே. அவன் வேலை முடிந்ததும் உன்னைத் துச்சமாய் தூக்கி எரிவான். மீண்டும் வருவேன்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!