Bio Data !!

29 August, 2026

பௌர்ணமிப் பெண்ணின் நிறை அழகிலும் மயங்காது மாமுனி போல் இறுகி இருண்டு கிடந்த நீள் நீர்ப்பரப்பின் "சுனாமி" எனும் கோரத் தாண்டவம் என் ரசனையைச் சிதைத்த நேரம் தான் வந்தது ஒரு செய்தி " நேபாளத்தில் பேரழிவு" எங்கள் "இதய" தேசத்தின் ஒரு பகுதியை அரணாய்க் காத்த வெண்பனி சூழ் இமயத்திலும் உலக வெப்பமடைதலால் அமைதியான அதிரடித் தாக்குதல். பேரிரைச்சலோடு நீர் கிளம்பி வரும் போது மக்களோடு மாக்களையும் கபளீகரம். இங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் எங்கே!! இதயத்தின் வலியை இடது கை உணர்த்துவது போல இமயத்தின் வலியை உலகுக்கு உரக்க உரைத்திருக்கிறது நேபாளம். உயிரைத் தவிர அத்தனையும் அடித்துச் செல்வதை பரிதவித்து பார்த்து நிற்குது ஒரு குடும்பம். ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு உயிரைக் காத்துக் கொண்ட முதியவர் இருவர். நீரின் வேகத்திலும் நீந்திக் கரை சேர்ந்த பரிக்களின் கூட்டம் ஒன்று. விதி உள்ளோர் பிழைத்துக் கொள்ளட்டும் எனக் விழி மூடிக் கிடந்தது பிரபஞ்சம். உடம்பானாலும் உலகமே ஆனாலும் கட்டுக்குள் இருந்தால் மட்டுமே அற்புதம். என்ன செய்யப் போகிறோம் நாம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!