27 December, 2024
முத்தச்சன் பாகம் 1
24 December, 2024
23 December, 2024
07 November, 2024
16 October, 2024
04 October, 2024
நட்பென்பது!!
03 October, 2024
30 August, 2024
19 August, 2024
08 August, 2024
31 July, 2024
25 July, 2024
05 July, 2024
25 June, 2024
24 June, 2024
நாவலின் பெயர் : நெஞ்சறுப்பு. ஆசிரியர் : இமயம்
க்ரியா பதிப்பகம் .
விலை. : ரூ275
முதல் பதிப்பு. : ஜனவரி 2024
கதை தன்னிலையில் ஒரு ஆண் சொல்வது போல் இருக்கிறது. அவர் மனைவி பெயர் காமாட்சி . ஒரு நாள் அவரிடம் தான் கேட்பதற்கு உண்மையைச் சொல்ல வேண்டும் என்கிறார் காமாட்சி. என்ன கேட்க போகிறாளோ என்று நினைக்கும் போதே. "சசிகலாங்கிறது யாரு? " என்கிறாள். " கதக்" என்று ஆகிறது இவருக்கு . சமாளிக்க முயலும் போதே சாட்சியத்தை அவர் முன் வைக்கிறாள் . ஒரு நோட்டில், என்று மெசேஜ் வந்தது , என்று போன் வந்தது, என்றெல்லாம் இவர் அழைத்திருக்கிறார் , எவ்வளவு நேரம் பேசி இருக்கிறார் , என அத்தனை தகவலும் குறிக்கப்பட்டிருந்தது .
திட்டுறது அடிக்கிறது எல்லாம் கோவத்துல சட்டுனு செய்றது . ஆனா ஏமாத்துறது திட்டம் போட்டு, நல்லா யோசித்து, சந்தர்ப்பம் பார்த்து செய்றது . புரியுதா ?" என தலையில் அடிப்பது போல் கேட்கிறாள்.
காமாட்சியும் கல்லூரி பேராசிரியை என்றாலும் இந்த விஷயம் தெரிந்ததிலிருந்து, அவள் கணவனையும் சசிகலாவையும் திட்டுவது ஒரு படித்த பெண் போலவே இருக்காது. இன்று ஆணானாலும் பெண்ணானாலும் அவர்கள் சம்பந்தப்படாமல் இருந்தால் கூட அவர்கள் குடும்பத்தில் ஒருவரால் குழப்பத்தை உண்டாக்க முடியும். இன்று விவாகரத்துகள் அதிகரித்ததற்கு பல காரணங்கள் சொல்கிறோம். இணையம் ஒரு முக்கியமான காரணம் .
காமாட்சி ஒரு கல்லூரி பேராசிரியை. தன் கணவனை மாமானு கூப்பிட்டது கிடையாது . அதனாலேயே சசிகலா வார்த்தைக்கு வார்த்தை மாமா என்றதும் அவரை நெருங்க காரணமாகி போனது . ரொம்ப நெருங்கினதும் செல்லமாக "கிழவா, கிழவா " என்பாள் . அது அவரை உயிர் நிலையில் உதைத்தது போல் இருக்கிறது.
சந்தேகம் என்பது இருபுறம் கூர்மையான கத்தி போன்றது. காமாட்சி அதனால் தன்னையும் காயப்படுத்திக் கொண்டு , மறுபுறம் தன் கணவனான ஸ்ரீரங்க பெருமாளையும் குதறி எடுக்கிறார்.
கத்தியில் முளைத்த மூன்றாவது திசையாக சசிகலாவும் அவர்கள் குடும்பத்திற்குள் குழப்பத்தை கூட்டிக் கொண்டே போகிறாள்.
விரக்தியின் எல்லையில் சொல்வார் "உலகத்திலேயே பெரிய கொடுமை, நாடு கடத்துவதோ , தூக்கில் போடுவதோ இல்லை . புருஷனும் பொண்டாட்டியும் ஒரே இடத்தில் வேலை செய்வது தான் " இதை எத்தனை பேர் ஒத்துக்குவீங்க.
வளர்ந்த குழந்தைகளுக்கு முன்னால் தன்னை மாமியார் கேள்வி கேட்டு மிரட்டும் போது , தன் தாயின் முன்னால் காமாட்சி தன்னை குற்றவாளி கூண்டில் நிறுத்தி குதறிய போதும், தான் போனில் பேசியது தவிர பெருசாய் என்ன செய்து விட்டோம் என்று நெஞ்சை சமாதானப் படுத்தும் நல்லவர் படும் பாடு அந்தோ பரிதாபம்தான்.
பழைய காலமா இருந்தா நான் லெட்டர் போட்டு சசிகலா லெட்டர் போட்டுன்னு விஷயம் கொஞ்சம் இழுத்திருக்கும். இவ்வளவு வேகமா சேர்ந்து இருக்கவும் முடியாது. பிரிஞ்சிருக்கவும் முடியாது. செல்போன் வந்து காலத்தை, தூரத்தை இல்லாமல் ஆக்கிடுச்சு. இதுதான் இன்றைய எதார்த்தம்.
கதையை வாசிக்கும் போது சசிகலா ஏன் விடாது தொந்தரவு கொடுக்கிறாள் என்று தோன்றினாலும், ஒரு இடத்தில் என் மனம் மாறினது, மூணு நாலு மாசத்துல நானும் அவளும் ஏழு கடல் அளவு , ஏழுமலை அளவு பேசி இருப்போம் . எனக்கு எப்போ ஃப்ரீ பீரியட் என்கிறது கூட அவளுக்குத் தெரியும் . இந்த இடத்தில் தான் ஒரு பெண் ஏமாந்து போகிறாள் . ஆண் கொடுக்கும் முக்கியத்துவம் காலா காலத்துக்குமானது என நம்புகிறாள். ஆனால் ஆணுக்கு பிரச்சனை வரும் வரை இருக்கும் ஜோர், அதன் பின் இருப்பதில்லை. அதுவரை தேவதையாய் தெரிபவள், பிரச்சனைக்கு பின் பிசாசாக தெரிகிறார். அதனாலயே பிரிவு பெண் அளவுக்கு ஆணை வாட்டுவதில்லை. " என்கூட படுத்துக்கிட்டே அவ கூட பேசிகிட்டு இருக்கீங்களா " என்று காமாட்சி கேட்பது தன் கணவனிடம் மட்டுமல்ல, இன்று பலரையும் நோக்கி , ஆண் பெண் பாகு பாடு இல்லாமல் எழுப்பப்படும் கேள்வி.
எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் தோன்றியது. போலீஸ் அதிகாரி "காற்று ஒருவருக்கு மட்டுமா வீசுது. அதெல்லாம் சுலபமா சரி பண்ணிடலாம் " என்று சொல்கிறார். அந்த அளவுக்கு சசிகலாவை கதையில் காட்டாததால் என் சார்பு சசிகலா பக்கமே சார்ந்தது.
சில விஷயங்களை பெரிது படுத்தாமல் விட்டால் நாளடைவில் அடுத்தவர் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடும். காமாட்சியும் அவளைச் சார்ந்தவர்களும் பெரிதுபடுத்தி விட்டார்களோன்னும் தோணுச்சு.
இன்றைய சூழலில் கண்டிப்பாக எழுத வேண்டிய ஒரு கருவை கதையாக்கி இருக்கிறார் இமயம். இதுவரை வந்த இவரது எல்லா நாவல்களிலும் இது வேறுபட்டது.
21 May, 2024
அதிர வைத்த மரணம்.
குழந்தைகள் முதல் முதியவர் வரை அத்தனை பேர் கையிலும் செல் இருக்கிறது. அன்று பாப்பாக்கள் சோறு உண்ண நிலவைக் காட்டினோம் . இன்று அந்ம நிலவைக் கூட செல்லில் காட்டுகிறோம். அதிலும் மற்ற எல்லாவற்றையும் விட அதற்குப் பிடித்தது ரீல்ஸ் தான்.
என்ன நடந்தாலும் கை , உதவ உயர்வதற்கு முன், படம் பிடிக்கத் தான் உயர்கிறது. முதலில் படம் பிடிப்பவர் தனக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்தாலும் சில வீடியோக்கள் காட்டுத் தீயை விட வேகமாகப் பரவுகின்றன.
அப்படிப் பரவிய ஒரு வீடியோ தான் ஒரு தாய் தவற விட்ட குழந்தையை மீட்ட வீடியோ.
எவ்வளவு நேரம் அந்த குழந்தை தனக்குக் கிடைத்த பிடியை பிடித்துக் கொண்டிருந்ததோ? அதற்கு ஆயுசு கெட்டி தான் காப்பாற்றப்பட்டு விட்டது. ஆனால் அதைக் காக்க வேண்டிய தாய் தற்கொலை செய்து இறந்து போனதாகச் செய்தி.
காரணம் : இந்த செய்திக்கு சோஷியல் மீடியாவில் வந்த எதிர்வினையாக இருக்கலாம். இல்லை வீட்டில் உள்ளவர்களின் எதிர்வினையாக இருக்கலாம். இல்லை தனக்குத் தானே இப்படிக் குழந்தையை விட்டு விட்டோமே காப்பாற்ற முடியாமல் போயிருந்தால் என்ன ஆகி இருக்கும் என திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து தன் மீதே ஏற்பட்ட கோபம் காரணமாக இருக்கலாம். எப்படியோ ஒரு உயிர் பறந்து விட்டது. இனி அந்த குழந்தை, பெற்ற தாய் இல்லாத குழந்தை.
பல செய்திகள் செல்லில் வேகமாய் பரவுகின்றன. அதற்கு கமென்ட் பண்ணும் போது நாகரீகமாகச் செய்வோம். நெருப்பை அள்ளிக் கொட்ட வேண்டாம். உடனே நாம் ஏதோ தவறே செய்யாத உத்தமர் வேடம் தரித்துக் கொள்ள வேண்டாம். நமது கமென்ட்டுகள் ஒரு உயிரை எடுக்கும் வலிமை வாய்ந்தது என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும். இந்ம இறப்பு செய்தி எனக்குச் சொன்னது இது தான்.
20 May, 2024
பக்கத்து காலி ப்ளாட்டில் அடிக்கும் வெயில் அப்படியே வீட்டுக்குள் கடத்தப்பட அதைக் குறைக்கும் எண்ணத்தோடு ஜன்னலை ஒட்டி வளர்க்கப்பட்ட வாதாம் மரம் இன்று வளர்ந்து படர்ந்து, குடை போல் விரிந்து பரப்பிய நிழலில், அடர் கருப்பு நிறத்தொரு பசு படுத்துக் கொண்டிருந்தது.
அது எழுந்து நின்ற போது தான் தெரிந்தது அது வயிற்றில் கன்றின் சுமை தாளாது தான் படுத்துக் கிடந்திருக்கிறது. வலியில் கால் மாற்றி கால் தடம் பதிக்கவில்லை. "அம்மா" என்றொரு அலறல் இல்லை. அமைதியாக நின்றிருந்தது.
கொஞ்ச நேரம் காத்து நின்று படுக்கச் சென்ற நான் விடிகாலை எழுந்ததும் அதைத் தேடிச் சென்றேன். மடியின் பாரம் இறக்கி, அங்கே மின்சாரத் துறையைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் போட்டிருந்த கிளைகளில் இருந்து இலை தழைகளை தின்று கொண்டு இருந்தது. கன்று கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தது.
இவ்வளவு பாரமா சுமந்து கொண்டிருந்தாய்?? ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் எப்படி பெற்றெடுத்தாய்?? இந்தப் பசுவுக்கு உடைமைக்காரர்கள் என்ன இப்படி தேடாமல் இருக்கிறார்கள் என பலவிதமாக வியந்து கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை பார்த்து வந்தேன்.
அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. என் பள்ளிக் காலங்களில் ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடத்தில் உள்ள மரத்தில் ஓலைப் பெட்டியில் கட்டி அங்கங்கே தொங்கிக் கொண்டிருக்கும். கன்று ஈனும் பசு வெளியே தள்ளும் கழிவுகள் தான் அது. அதைக் கவனிக்கவில்லை என்றால் பசு தின்று விடும். ஆபத்து . அதனால் அதை ஓலைப் பெட்டியில் வைத்து ஒதுக்குப் புறமாய் உள்ள மரத்தில் கட்டி விடுவார்கள் என்று வளர்ந்த பின் புரிந்து கொண்டிருந்திருக்கிறேன்.
இந்த பசு ஈன்ற இடத்தில் அப்படி ஏதும் இல்லையே?? பசுவுக்கு ஏதும் ஆகி விடுமா?? என் கவலைகளுக்கு நடுவே உடைமைக்காரர்கள் தகவல் கிடைத்து வந்து விட்டார்கள். வந்து ஓய்ந்து கிடந்த கன்றைத் தூக்கி பைக்கின் முன் பகுதியில் வைத்து லேசாக நகரத் தொடங்கியதும் அந்த கரிய நிறப் அம்மாப் பசு "அம்மா" என்று சத்தமிட்ட படி அந்த பைக்கை தொடர்ந்து தன் கனத்த மடி அசைய ஓடத் தொடங்கியது.
தாய்மை. ஐந்தறிவு உடைய மிருகங்களிடமே தானாய் கனியும் போது,
இயற்கையான ஒன்றிற்கு
நாம் , பெண்கள் பெருமைப்பட எதுவுமே இல்லை என்று தோன்றியது.
21 April, 2024
அமேசான் ப்ரைமில் JBABY என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். இயக்குநர் சுரேஷ் மாரி. முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன். தயாரிப்பு பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர். OTT வந்த பிறகு நல்ல நல்ல கருத்துகளில் படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயாராய் இருப்பது அதிகரித்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது. இது பாராட்டுக்குரியது
இசை டோனி பிரிட்டோ. ப்ரதீப் குமார் அன்னி ஜே பாடிய "நெடுமரம் தொலைந்ததே" என்னும் இப் படப் பாடல் அன்னையர் தினத்தை ஒட்டி வெளியிடப் பட்டு இருக்கிறது. சூப்பர் மெலடி.
மனித மனம் என்பது கண்ணாடி போன்றது. அது Glass, Handle with care என்று அறிவுறுத்த எடுத்த படம் போல் உள்ளது.
JBABY ஆக ஊர்வசி . இது அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற கதாபாத்திரம் என்பதால் ஜொலிக்கிறார். மூன்று ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் பெற்ற தாய், கணவனையும் இழந்த நிலையில் , வாழ்க்கையின் வலிகளை தாங்க முடியாத ஒரு கட்டத்தில் புத்தி பேதலித்து , பல செயல்களைச் செய்து விடுகிறார்.
கதவிலேயே பூட்டு மாட்டி இருந்தால் அடுத்த வீடுகளில் இருப்பவர்களை உள்ளேயே வைத்து பூட்டி சாவியை எடுத்து வந்து விடுவது, வீட்டில் உள்ள சின்ன சின்ன நகைகளை கொண்டு போய் கஷ்டப்படுபவர்களுக்கு உதவியாக கொடுத்து விடுவது, பிற வீடுகளின் லெட்டர் பாக்சில் உள்ள கடிதங்களை எடுத்து வந்து விடுவது, பிரச்னைகளில் மாட்டிக் கொள்ளும் போது நான் ஸ்டாலினின் தோழி, ஜெயலலிதாவின் தோழி என புருடா அடித்து விடுவது என ரகளை பண்ணி வரும் ஒரு முதிய பெண் கோபத்தில் வீட்டை விட்டு காணாமல் போய் விடுகிறார். அவர் கல்கத்தாவில் இருப்பதாக அதிகார பூர்வ தகவல் கிடைத்து போய் அழைத்து வருவதற்குள் அந்த நடுத்தரத்துக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகள் படும் துயரம் நம்மை நெகிழ வைத்து விடுகிறது.
பொதுவாகவே வயதானவர்களை பெண் பிள்ளைகள் அளவு ஆண் பிள்ளைகள் கவனித்துக் கொள்வதில்லை என்ற கருத்தை இந்த படத்தில் முறித்திருக்கிறார்கள். ஐந்து பிள்ளைகளுமே அம்மா மேல் அனுசரணையோடு தான் இருக்கிறார்கள்.
சில இடங்களில் நம்மை கண் கலங்க வைத்து விடுகிறார் இயக்குநர். உதாரணமாக அம்மா மேல் கோபத்தில் கை ஓங்கி விடும் தினேஷ் அம்மா திரும்பி வந்ததும்
சாப்பிடச் சொன்னதும் , அம்மா முதல் வாயை மகனுக்கு ஊட்டி விட, அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு " ஏம்மா என்னை பாவம் பண்ண வைக்கிற " என்று தினேஷ் கண் கலங்குவதும். அதற்கு அம்மா "நீ ஏன்ப்பா அழுற நானா உன்னை அடிச்சேன். நீ தான என்னை அடிச்ச" என்று கேட்கும் போது நாமும் பதறி விடுகிறோம்.
ஒரு விஷயம் எனக்கு நெருடலாய் இருந்தது. வயதின் முதிர்ச்சியும் பிரச்னைகளின் அழுத்தமும் காரணமாகி வரும் மெல்லிய மன நோயை குணப்படுத்த வைத்திருக்கும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் எல்லாம் முற்றிய மன நோய் உடையவர்களாகக் காண்பித்திருப்பது தான் அந்த நெருடல்.
தந்தை இல்லாத தினேஷ் தன் குடிகார அண்ணனிடம் "வாப்பா போப்பா" என்று பேசுவது அவ்வளவு பாந்தமாக இருக்கிறது.
இது ஒரு நிஜ நிகழ்வின் அடிப்படையில் எடுத்த படம் என்கிறார்கள் முடிவில். அது மட்டுமல்லாது கல்கத்தாவிற்கு போய் விட்ட பேபி அம்மாவை கண்டு பிடிக்க உதவும் எக்ஸ் மிலிட்டரி மேன் பாத்திரத்தில் நிஜத்தில் உதவியவரையே நடிக்க வைத்திருக்கிறார்கள்.
நம்மை பெற்றவர்களை இறந்த பிறகு அப்படி கவனிச்சிருக்கணும் இப்படி கவனிச்சிருக்கணும்னு சொல்வதை விட்டு இருக்கும் போதே நல்லா பார்த்துக்கணும்னு நம்மை சிந்திக்க வைக்கும் நல்ல படம். Don't miss it.
20 March, 2024
எனக்கு பிடித்த இன்னொரு படம் "ஆட்டம்" மலையாளம்.
இயக்குநர் : ஆனந்த் ஏகர்ஷி ( இது இயக்குநரின் முதல் படம் என்று சொல்கிறார்கள்)முக்கிய கதாபாத்திரத்தில் : வினய் ஃபோர்ட், கலாபவன் ஷாஜோன், ஜரின் ஷிஹாப்
முதல் படத்திலேயே கை தட்டல் வாங்கி விடுகிறார் இயக்குநர். படத்தின் முடிவு ஒரு தேர்ந்த இயக்குநரின் அனுபவத்தை சொல்கிறது.
ஒரு டிராமா குரூப். அத்தனை ஆண் நடிகர்களுடன் ஒரே ஒரு பெண் ( அஞ்சலி) நடிக்கிறார். எந்த வித ஆண், பெண் பாகுபாடும் இன்றி பழகுகிறார். அதில் பள்ளியிலிருந்தே உடன் படித்த ஒரு நண்பர்( வினீத்) இருக்கிறார். அவரோடு ரிலேஷன் ஷிப்பில் இருக்கிறார் அஞ்சலி . ஆனால் வினய் திருமணமானவர். மனைவி உடனான விவாகரத்து வழக்கு முடிவடையாத நிலையில் அந்த நட்பு வெளியே தெரிய வேண்டாம் என நினைக்கிறார்.
அந்த பார்ட்டியில் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் குடிக்கிறார்கள். ( மலையாளப் படத்தில் குடிப்பது என்பது தவறாமல் இடம் பெறுவதில் எனக்கும் உடன்பாடில்லை)
குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப் படும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அஜென்டா. ஒரு பெண்ணின் மன உணர்வுகளுக்கு அங்கே இடமே இல்லை. மொத்த குழுவாக விவாதித்தாலும் ஒத்த கருத்துள்ள இருவர் மூவராக தனியாகவும் விவாதிக்கிறார்கள். எல்லோர் சொல்லும் கருத்துக்கும் பின்னால் அவர்களுக்கான சுயநலம் இருக்கிறது என்பதை அடையாளப்படுத்திய காட்சிகள்.