Bio Data !!

28 July, 2026

#பஃறுளி

// அடுத்து என்ன கேட்கப் போகிறாய். அற்ப ஆணே கேள் எனும் நோக்கில் "நிமிர்ந்து" நின்றது அவனை சலனமற்று இருக்கச் செய்தது. // என் பல்லாண்டு கால நண்பர் நர்சிம் எழுதிய "பஃறுளி" நாவலில் ஒரு வரி. " அற்ப ஆண் " இது ஒரு சில வயது பேதமற்ற சந்தேகம் என்னும் தீரா நோய் பற்றிய ஒரு சிலரை மட்டுமே குறிக்கும். எத்தனையோ பெருந்தன்மையான நல்ல ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் ரொம்ப கொஞ்ச பேர் என்று ஒதுங்கிப் போக முடியாத அளவில் இருக்கிறார்கள். Exceptions are not rules என்பார்கள் . அந்ம அளவில் குறுகிய எண்ணிக்கையில் இருந்தால் நாம் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இராது. இந்த "நிமிர்வு" க்குப் பின் கலங்கிப் பாரத்துத் தன் மார்பில் சாய்ந்த கணவனை அரவணைத்துக் கொள்கிறாள் கோமதி என்னும் கதை நாயகி. அவ்வளவு தான் ஒரு சில பெண்களைத் தவிர மீதி எல்லோரையும் தாய்மை என்னும் அலை சூழ்ந்து அரவணைத்துக் கொள்ளும். அவள் கோபத்தைக் கொல்லும். பெண்ணின் உணர்வுகளை உணர்ந்து சொல்லும் மற்றுமொரு எழுத்தாளர்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!